சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில், விசேட கவனம் - ஜனாதிபதி
இலங்கையில் உள்ள சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். இதன்படி சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான தேசிய நோக்கத்தை, எதிர்வரும் சில வாரங்களுக்குள் ஏற்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேசிய நோக்கத்துக்கான அனைத்து நடவடிக்கைகளையும், தற்பொழுது முன்னெடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளிட்ட போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் தற்போது முகம் கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து தெளிவான அறிக்கை ஒன்றைப் பெற்று, நடைமுறையிலுள்ள வேலைத்திட்டங்களை பலப்படுத்துவது குறித்து, இந்த செயல்திட்டத்தை ஊடாக ஆராயப்படும் என்று ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment