Wednesday, February 20, 2019

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக, கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக, கிளிநாச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமை செயற்பாட்டு இயக்கங்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இன்று முற்பகல் 10.30 அளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநாச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம், ஏ9 வீதியூடாக டிப்போ சந்தி வரை சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் காணப்படும் பாதகமான விடயங்கள் தொடர்பாக, மக்களை விழிப்பூட்டும் வகையில் பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் சத்தமாக கோஷம் எழுப்பினர்.

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து, பல வருடங்கள் கடந்துள்ள நிலையில், பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டுமென, ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com