கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், சட்டமா அதிபரையும் அழைக்க தீர்மானம் - மனோ கணேசன்.
எதிர்வரும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சட்டமா அதிபரையும் அழைப்பதற்கு, கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக, அரச கரும மொழிகள், இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை ஒன்றை பெற்றுக்கொள்வதற்காகவே, சட்டமா அதிபரை கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு அழைக்கவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டார்.
ஏற்கனவே ஏழு மாகாணங்களுக்கான ஆட்சிக் காலம் நிறைவடைந்த நிலையில், அந்த மாகாணங்கள் ஆளுநரின் கட்டுப்பாட்டில் குறித்த செயற்பட்டு வருகின்றன. ஏனைய இரண்டு மாகாணங்களுக்கான ஆட்சிக் காலமும் விரைவில் நிறைவடையவுள்ளன.
இந்த நிலையில், விரைவாக மாகாண சபைத் தேர்ததலை நடத்துவது தொடர்பாக, விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தின் போது, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து, பல்வேறு தரப்பினர் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதன் காரணமாக மாகாண சபை தேர்தலை நடத்துவதில், தொடர்ந்தும் இழுபறிநிலை நீடிக்கின்றது.
0 comments :
Post a Comment