பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை!
பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, செய்திகள் வெளிவந்துள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழு, இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் கட்சிகள் மீது, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பல அவதூறான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இதனை அடுத்து, சம்பவம் குறித்து, விரிவாக ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்க, அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு, சம்பவம் குறித்து ஆராய்ந்து, கட்சியின் அடுத்த செயற்குழு கூட்டத்தில் அறிக்கையை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என, அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment