Wednesday, February 20, 2019

''பௌத்த மதத்தை பாதுகாப்பதே எனது பிரதான நோக்கம்'' - பிரதமர்

''பௌத்த மதத்தைப் பாதுகாப்பதே தமது பிரதானமான நோக்கம்'' என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, பிரதமர் இதனை தெரிவித்தார். எனினும் இந்த விடயத்தை நாடு முழுவதும் பரப்புரை செய்வதற்கான அவசியம் எனக்கில்லை, எனவும் அவர் கூறினார்.

தம்மை சிங்கள பௌத்தர்களெனக் கூறிக் கொள்ளும் சிலர், அரசியல் நோக்கத்துக்காகவே அவ்வாறு கூறுவதாகவும், அவர்களது கருத்தில் எந்தவிதமான நேர்மையும் இல்லை எனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் புதிய வரைபு இதுவரை தயாரிக்கப்படவில்லை. அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி சமர்ப்பித்த பரிந்துரை, தற்போது மீளப் பெறப்பட்டு விட்டது என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com