Wednesday, February 27, 2019

இலங்கையின் செயற்பாட்டில் முன்னேற்றம் இல்லை - நெருக்கடியை கொடுக்கும் சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தத்தை சர்வதேச நாடுகள் வழங்க வேண்டும் என, சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள 40ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை முன்வைக்கவுள்ளன. குறித்த அறிக்கையிலேயே இந்தக் கோரிக்கை வலியுறுத்தப்பட உள்ளது.

காணாமல் போனோர் அலுவலகம் மிகவும் தாமதமாகாவே பல அழுத்தங்களின் மத்தியில் அமைக்கப்பட்டது. பயங்கரவாதத்தை மீளப்பெற்றுக் கொள்வதாக அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. இவ்வாறான பின் தங்கிய போக்கில் இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் விடயத்தில் செயற்படுவதனால், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் எழுத்துமூல அறிக்கையொன்றை நடைபெற்றுவரும் அமர்வில் முன்வைக்க உள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரால் முன்வைக்கப்படவுள்ள குறித்த அறிக்கைக்கு சர்வதேச நாடுகள் தமது ஆதரவை தெரிவித்துள்ளன.

அத்துடன்அந்த அறிக்கையில் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com