Wednesday, February 27, 2019

காத்தான்குடி கடற்கரையில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் உடலம்

காத்தான்குடி - தாளங்குடா வேடன் கிராமத்தை அண்மித்த கடற்கரையில் பெண் ஒருவரின் உடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த உடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கண்டறியப்படவில்லை. இந்த நிலையில் குறித்த பெண் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துள்ளாரா ? மற்றும் பெண்ணின் விபரங்களை பொலிசார் விசாரித்து வருகின்றார்கள்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com