Wednesday, February 27, 2019

வர்த்தகர்கள் கொலை தொடர்பில் முறைப்பாடின்றி விசாரணை ஆரம்பம் - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

வர்த்தகர்கள் இரண்டு பேர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது. இது குறித்த முறைப்பாடு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வழங்கப்படவில்லை. இந்த நிலையிலேயே மாத்தறை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தின் ஊடகா விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனிடையே எவராவது ரத்கம - உதாகம பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர்கள் இருவர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்தால் அது சம்பந்தமாக மற்றொரு விசாரணை ஆரம்பிக்கப்படும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com