Wednesday, February 27, 2019

இலஞ்சம் பெற முயன்ற ஒருவர் கைது, மற்றொருவர் மடக்கிப் பிடிப்பு

மகவலி அதிகரசபையின் அங்குணுகொலபெலஸ்ஸ முரவெசிஹேன அலுவலகத்தின் முகாமையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

5000 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொள்ள முயற்சித்த குற்றத்தில் நேற்று குறித்த நபர் கைதாகியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று, காலி பிரதான வீதியில் கடிகார விற்பனை நிலையம் ஒன்றில் கப்பம் பெற முயற்சித்த ஒருவர், பொலீஸாரில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடைக்கு வந்த குறித்த நபர் கப்பம் பெற முயன்ற வேளையில் கடை உரிமையாளரால் தாக்கப்பட்டு மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த CCTV காணொளியும் பொலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் நீண்ட நாட்களாக காலி பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் கப்பம் பெற்று வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற நேற்றை தினம், கத்தி ஒன்றை காண்பித்து கப்பம் பெற முயற்சித்துள்ளார். இதன்போது ஒருவர் கத்திக்கு இலக்காகி காயம் அடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், காயமடைந்த நபர் கராப்பிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com