Wednesday, February 27, 2019

2025ஆம் ஆண்டுக்கு முன்னர் ஏற்றுமதியில் வாசனைத் திரவியங்கள் முதலிடம் வகிக்கும் - அமைச்சர் தயா கமகே

இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருளாக வாசனைத் திரவியங்களை 2025ஆம் ஆண்டுக்கு முன்னர் முதலிடத்திற்கு கொண்டு செல்வதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

வாசனைத் திரவியங்களுக்கான முத்திரையை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு பிரதான வாசனை திரவியங்களான கறுவா, மிளகு, கராம்பு, சாதிக்காய் ஆகியன ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறித்த கறுவா, மிளகு, கராம்பு, சாதிக்காய் ஆகிய நான்கு வாசனைத் திரவியங்களையும் உள்ளடக்கும் வகையில் தற்போது முத்திரை வெளியிடப்பட்டுள்ளது

இதனிடையே, உள்நாட்டு வாசனைத் திரவியங்களின் பெறுமதியை மேம்படுத்துவதற்காக ஏற்றுமதியாளர்களுக்கும் துறைசார் உற்பத்தியாளர்களுக்கும் உயர்ந்தபட்ச நிவாரணங்கள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தயா கமகே இதன்போது மேலும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com