Sunday, February 10, 2019

மக்கள் நலன் கருதாத கூட்டு ஒப்பந்தத்திற்கு, எதிர்ப்பு தெரிவித்து பாத யாத்திரை.

மக்கள் நலனை கருத்தல் கொள்ளாத கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக பெருந்தோட்ட மக்கள் பாத யாத்திரையொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். புதிதாக கைச்சாத்திடப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளது.

மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் எதிர்வரும் செவ்வாய்கிழமை இந்த பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கயை குறித்த பாதயாத்திரை நுவரெலியா முதல் ஹட்டன் வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள உயர்வு விடயத்தில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலையை கண்டித்தும், கடந்த காலத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட வருகைக்கேற்ற திறன் விருத்தி கொடுப்பனவு 140 ரூபாயை புதிய கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்குமாறு வலியுறுத்தியுமே, இந்த பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, கூட்டு ஒப்பந்தத்தின் மூலம், பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக, தமிழ் முற்போக்கு கூட்டணி தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றது.

அத்துடன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமது தரப்பு போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com