Tuesday, February 12, 2019

கடற்பகுதிகளில் இடம்பெறும் குற்றங்களை கட்டுப்படுத்த புதிய குழு நியமனம்

இலங்கையின் கடற்பிரதேசங்களில் இடம்பெறும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கு, புதிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்திணைக்களத்தின் நடவடிக்கைப் பிரிவுப் பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரண தெரிவித்துள்ளார்.

கடற்தொழில் திணைக்களத்தில் இன்று வைத்து இன்று கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் என்பன தற்போது அதிகளவில் கடற்பிரதேசங்களினூடாகவே இடம்பெறுகின்றன. அவற்றினைக் கட்டுப்படுத்துவதற்கு கடற்படை மற்றும் ஏனைய பாதுகாப்புப் பிரிவுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

எனினும் கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்தே வண்ணமே உள்ளன. இந்த நிலையிலேயே குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் கடற்படை உளவுப்பிரிவு, குற்றப்புலனாய்வுத் திணைக்களம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்திணைக்களம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் உள்ளடங்கியுள்ளதாக, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்திணைக்களத்தின் நடவடிக்கைப் பிரிவுப் பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரண தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com