Tuesday, February 12, 2019

தயாசிறி ஜயசேகரவிற்கு திடீர் மாரடைப்பு - வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜெயசேகர சற்று முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தயாசிறி ஜெயசேகரவிற்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளன.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவின் தற்போதைய உடல்நிலை குறித்த விபரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com