Thursday, February 21, 2019

எந்த அரசியல் குழுவுக்கும் சார்பாக செயற்பட மாட்டேன் - இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர்

எந்தவொரு அரசியல் குழுவுக்கும் சார்பாக செயற்படாமல் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தை வழிநடத்தப் போவதாக புதிய தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தலில் அதிகளவிலான வாக்குகளினால் காலிங்க இந்திரதிஸ்ஸ வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக தெரிவாகிய பின்னர் கருத்துத் தெரிவித்த அவர், நீதித்துறையின் கௌரவத்தைப் பேணும் வகையில் தான் செயற்படுவேன் என்று வாக்குறுதி வழங்கினார்.

இவருக்கு ஆதரவாக 4702 வாக்குகள் கிடைக்கப் பெற்றன. இவருடன் போட்டியிட்ட சட்டத்தரணி மஹிந்த லொக்குகே 1346 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதேவேளை, சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய செயலாளராக சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவராக யு.ஆர்.டி. சில்வா செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com