Thursday, February 21, 2019

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளும், பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சாத்திகளின் இறுதித் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை பரீட்சார்த்திகள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி வரையும் தமது விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித்த தெரிவித்துள்ளார்.

இந்த அறிவித்தலை சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆகியோர் கவனத்தில் எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com