Saturday, February 23, 2019

ஹட்டனில் தடைசெய்யப்பட்ட பெருந்தொகை புகையிலை தூளுடன் ஒருவர் கைது

ஹட்டனில் உள்ள வீடு ஒன்றில் இருந்து புகையிலை தூள் அடைக்கபட்ட 750 ரின்களுடன் ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாக, ஹட்டன் குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் ரவிந்திர அம்பேபிட்டியவின் பணிப்புரைக்கு அமைய மேற்க்கொண்ட சுற்றிவளைப்பு போதே, இந்த கைது இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்வதற்காக புகையிலை தூள் அடைக்கபட்ட ரின்கள் வைக்கபட்டிருந்ததாக ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. புகையிலை தூள் அடைக்கபட்ட ரின்கள் இலங்கையில் தடை செய்யபட்டிருந்தாலும் இவை நாட்டில் அதிகமாக விற்பனை செய்யபடுவதாகவும் தெரிவிக்கபடுகின்றது.

இதன்போது, என்சி பெட்டிகளில் ஒரு பெட்டியில் 25 டின்கள் படி 30 பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் குற்றத் தடுப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com