Saturday, February 23, 2019

போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டால் நாடாளுமன்ற உறுப்புரிமை நீக்கம்: மஹிந்த அமரவீர

நாடாளுமன்ற உறுப்பினர்கள், போதைப்பொருள் பயன்படுத்துவார்களாயின், அவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட வேண்டும் என, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அமைச்சர்கள் சிலரும், போதைப்பொருள் பயன்படுத்துவதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு பதிலளித்த போதே பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்கள் யாராவது போதைப்பொருள் பயன்படுத்துவது ஆதரங்களுடன் நிரூபிக்கப்பட்டால், அவர்களை அமைச்சுப் பதவியிலிருந்து மட்டுமல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும்.

கடந்த கால ஆட்சியாளர்களினால் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.

நாட்டினது அரசியல்வாதிகளே போதைப்பொருள் பாவனையாளர்களாக காணப்பட்டால் நாட்டின் எதிர்கால நிலைமை என்னவென்பது கேள்விக்குறியான விடயமாகும் என சுதந்திர கட்சியின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர மேலும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com