Saturday, February 23, 2019

வர்த்தகர்களின் கொலையை கண்டித்து, முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

ரத்கம உதாகம பகுதியில் இரண்டு வர்த்தகர்கள், கொலை செய்யப்பட்டமையை கண்டித்து, முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் சற்று முன்னர் கைவிடப்பட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை பொலிஸார் கைது செய்தமையினை அடுத்தே, குறித்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

அண்மையில் கடத்தப்பட்டு  இரண்டு வர்த்தகர்கள், இன்றைய தினம் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com