Saturday, February 23, 2019

நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 3711 பேர் கைது!

நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், 3711 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளார். இந்த விசேட சுற்றிவளைப்பு 24 மணிநேரம் நீடித்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டவர்களில், 938 பேருக்கு ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களில் 768 பேர் மதுபோதையில் வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தலைமையில் 17,213 பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 5818 பேர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com