Sunday, February 10, 2019

செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை அச்சுறுத்திய இராணுவம்.

செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவரை, இராணுவத்தினர் அச்சுறுத்திய சம்பவம், முல்லைத்தீவு, கணுக்கேணியில் இன்று இடம்பெற்றுள்ளது.

கணுக்கேணிப் பகுதியில் பொதுக் குழாய்க்கிணறு ஒன்றில் இருந்து இராணுவத்தினர் தொடர்ச்சியாக, இருபதிற்கும் மேற்பட்ட தண்ணீர் பௌசர்களில் நீரை எடுத்து செல்கின்றனர்.

இதனால் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக, பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் முறைப்பாடும் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து, இராணுவத்தினரிடம் நீர் எடுக்க வேண்டாம் என்று கோரிக்கை முன்வைத்தமையால், இராணுவத்தினருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்து வகையில், இராணுவத்தினர் ஒளிப்படம் எடுத்துள்ளதுடன், ஊடகவியலாளர் ஒருவரின் கமராவினையும் பறிக்க முற்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த செய்தியைப் பதிவு செய்து கொண்டிருந்த ஊடகவியலார்களை, அங்கிருந்த இராணுவ அதிகாரிகள் கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com