Sunday, February 10, 2019

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, சர்வாதிகாரத்திற்கு நிகரானது - ஜே.வி.பி

இலங்கையில் இப்போதுள்ள நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, சர்வாதிகார ஆட்சிக்கு நிகரானதாகவே காணப்படுவதாக, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனை தெரிவித்தார்.

ஆட்சி அதிகாரங்கள் அனைத்தும், ஒரு தனிநபர் கையில் குவிக்கப்பட்டுள்ளதால் முறையற்ற அதிகாரப் பிரயோகங்கள் இடம்பெற அதிகமான வாய்ப்புக்கள் உள்ளன.

இந்த நிலைமை, ஓர் சர்வாதிகார ஆட்சிக்கே வழிவகுக்கும் என்பது இன்று எம் அனைவராலும் அறியக்கூடியதாகவுள்ளது. ஏற்கனவேயே கடந்த ஆட்சியில் நாட்டு மக்கள் சர்வாதிகார ஆட்சியினை அனுபவித்திருந்தனர்.

தற்போதுள்ள இலங்கையில் நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை நீக்காவிட்டால், பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் எதிராக, நாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவோம் என, ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com