Tuesday, February 12, 2019

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்றிய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுடன் நேற்று பத்தரமுல்லவில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வுகண்டு அரச கொள்கைகளுக்கு அமைவாக அனைவருக்கும் உயர்ந்தபட்ச சலுகைகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

அதேபோன்று வளர்ச்சியடைந்துள்ளோருக்கே மேலும் முன்னேறுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தாது வீழ்ச்சியடைந்துள்ளோரை மீண்டும் கட்டியெழுப்புவதற்கே அரச கொள்கைகளுக்கு அமைவாக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி இதன்போது வாக்குறித்து வழங்கினார்.

அத்துடன் வறுமையிலுள்ள மக்களை முன்னேற்றுவதற்கு முன்னுரிமையளித்து விரிவான செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதார சுபீட்சத்திற்காக வலுவான பயணமொன்றினை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com