Tuesday, February 12, 2019

போதைப்பொருள் வர்த்தகத்திற்கு பிரதமரின் அரசாங்கமே மீண்டும் புத்துயிர் அளித்தது - குற்றம் சுமத்துகின்றார் விமல் வீரவன்ச

போதைப்பொருள் வர்த்தகத்திற்கு ரணிலின் அரசாங்கமே மீண்டும் புத்துயிர் அளித்தது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரோடு உள்ளவர்களும் மறைமுகமாக உதவுகின்றார்கள். குறிப்பாக நாட்டிலும் மற்றும் வெளிநாட்டில் இருக்கும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு பிரதமரின் அரசாங்கம் தேவையான உதவிகளை வழங்கி வருகின்றது.

போதைப்பொருள் வார்த்தகளுக்கும் ரணில் அரசாங்கத்திற்க்கும் உள்ள தொடர்பை ஜனாதிபதி நன்கு அறிவார். போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராகவும் அவர்களுக்குப் பக்கபலமாக இருக்கும் சில அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக நடவடிக்கைளை எடுக்கவேண்டும். மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு முடிவு கட்டப்பட்டிருந்தது. ஆனால் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் மீண்டும் போதைப்பொருள் வர்த்தகத்துக்கும் பாதாள உலகக் குழுவினருக்கும் தாராளமாகச் சுதந்திரம் அளிக்கப்பட்டது என விமல் வீரவன்ச மேலும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com