Wednesday, February 6, 2019

மரண தண்டனை வழங்குவதில், உறுதியாக உள்ளேன் - சற்று முன்னர் ஜனாதிபதி தெரிவிப்பு.

மரண தண்டனை விதிப்பது குறித்து, தமக்கு எவ்வாறான தடைகள் வந்தாலும், மரண தண்டனை விதிப்பது உறுதி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சற்று முன்னர் நாடாளுமன்றதிற்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றில் வைத்து உரையாற்றும் போதே இதனை கூறியுள்ளார்.

மரண தண்டனை விதிக்கும் செயற்பாடுகளில், மனித உரிமைகள் ஆணைக்குழு ஒருபோதும் தலையிட கூடாது.

பாரிய குற்றம் இழைத்தவர்களுக்கே மரண தண்டனை வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு, வக்காலத்து வாங்க கூடாது என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார்.

எமது நாட்டை ஒழுக்கம் உள்ள நாடாக மாற்ற வேண்டும் என்பதே, எனது நோக்கம் என்றும், அவர் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com