Wednesday, February 6, 2019

பாடசாலை அதிபருக்கு போட்டுப்பிடித்த முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகருக்கு பிணை.

மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரியின் அதிபரை அடித்தார் என்கிற சந்தேகத்தில் ஆஜராக்கப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஒருவரை கல்முனை நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்து உள்ளது.

கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸார் இவரை கல்முனை பதில் நீதிவான் எம். கே. பேரின்பராசாவின் இல்லத்தில் கடந்த திங்கட்கிழமை ஆஜர்ப்படுத்தினர்

கல்முனை பதில் நீதிவான் பேரின்பராசா தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இருவரின் சரீர பிணையில் சந்தேக நபரை விடுவித்து வழக்கை எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

சந்தேக நபரை ஆதரித்து சட்டத்தரணி ரொஷான் அக்தர் ஆஜரானார்.

பாடசாலை அதிபர் வழங்கிய முறைப்பாட்டை அடுத்தே பொலிஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


(எஸ்.அஸ்ரப்கான்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com