Wednesday, February 6, 2019

ஐ.தே.க.வின் தேசிய அரசாங்கத்தை, மைத்திரி- மஹிந்த கூட்டணி, தோற்கடிக்க வேண்டும் - வாசுதேவ.

ஐக்கிய தேசிய கட்சி உருவாக்கவுள்ள தேசிய அரசாங்கத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து தோற்கடிக்க வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறியுள்ளதாவது,

ஐக்கிய தேசிய கட்சி, அடுத்து நடைபெறவுள்ள தேர்தலுக்காக, தமது கட்சியினை பலப்படுத்தும் நடவடிக்கையை, தற்போது தீவிரமாக ஆரம்பித்துள்ளது. இதற்காகவே ஐக்கிய தேசிய கட்சி, தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் விடயத்தில் அதிக அக்கறையை காட்டுகின்றது.

ஆனால், இதனை இல்லாதொழிக்கும் வகையில், மைத்திரி- மஹிந்த இணைந்த புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும், நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, வலியுறுத்தியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com