Tuesday, February 26, 2019

நாளை கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவிற்கு முன்பாக போராட்டம்

முகாமைத்துவ உதவியாளர்கள் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதன் அவசியத்தை வலியுறுத்தி போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை, கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவிற்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளதாக துண்டுப்பிரசுரம் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

''உரிமைகளை வென்றெடுக்க ஒரு நாள்'' எனும் தொனிப்பொருளில் இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.

அரசாங்க முகாமைத்துவ உதவியாளர்கள் நாளைய தினம் சுகயீன விடுமுறையை பெற்று பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு, போராட்டத்திற்கு வலுச் சேர்க்குமாறு குறித்த துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை நடைபெறவுள்ள போராத்தின் போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஆகியோரிற்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளிக்கவுள்ளதாக போராட்டக்க்காரர்கள் தெரிவித்துள்ளார்கள்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com