Friday, February 8, 2019

அடுத்த வாரம் மீளாய்வு செய்யும் பணிகள் ஆரம்பம்

நடைபெற்று முடிந்த 2018 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பங்களின் தொகை 65,000 என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீளாய்விற்காக விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பம் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல், இவ்வாண்டு ஜனவரி 16 ஆம் திகதி வரையில் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் பெறுபேறுகளை மீளாய்வு செய்யும் பணிகள் அடுத்த வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சசைக்ள ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித்த தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கடந்த வருடம் நடைபெற்ற உயர் தர பரீட்சையில் 7,21,469 பேர் தோற்றியிருந்த அதேநேரம் 1,60, 907 பேர் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளனர். இதேவேளை, 119 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை இடைநிறுத்தபட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com