Friday, February 8, 2019

கபில நிற தத்தி தாக்கி பயிர்களை பதராக மாற்றும் மேலும் ஒரு அபாயம்

மட்டக்களப்பு – கிரான் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பூச்சிகளின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். கிரான் கமநல சேவை பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் 14,925 ஏக்கர் விவசாய நிலங்களில் பயிர்செய்கை இடம் பெற்றிருந்த நிலையில், அவற்றில் 9,294 ஏக்கர் விவசாய நிலங்கள் கபில நிற தத்தியின் தாக்கம் காரணமாக அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் சுமார் 2800 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெற்பயிர்களை அறுவடை காலத்தில் தாக்கும் கபில நிற தத்திகள் பயிர்களை பதராக மாற்றுவதாக அங்கிருக்கும் விவசாயிகள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் இந்த கபில நிறத் தத்தியின் தாக்கம் காரணமாக நெல் பயிர்கள் கருப்பு நிறத்தில் மாறுவதுடன், சோறு துவர்ப்பு சுவையைத் தருவதாக விவசாயத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com