Friday, February 8, 2019

மட்டக்களப்பில் ஜனாதிபதி .............

இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்பிற்கு விஜயம் செய்கின்றார். வறுமையை ஒழிப்பதற்காக நடை முறைப்படுத்தப்படும் கிராம சக்தி இயக்கத்தின் கிழக்கு மாகாண செயற்குழு கூட்டம், ஜனாதிபதி தலைமையில் மட்டக்களப்பு மண்முனை வடக்குப் பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வசிக்கும் 5 லட்சத்து 26 ஆயிரத்து 576 மக்களில் சுமார் 11 .3 வீதமானவர்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளங் காணப்பட்டுள்ளார்கள். அத்துடன், அம்பாறை மாவட்டத்த்தில் 6 லட்சத்து 49 ஆயிரத்து 402 மக்களில் சுமார் 2.6 வீதமானவர்களும், திருகோணமலையில் 3 லட்சத்து 79 ஆயிரத்து 541 மக்களில் 10 வீதமானவர்களும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

ஆகவே இந்த மக்களில் வாழ்வாதாரங்களில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது.

இந்த நிலையில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் கிராம சக்தி மக்கள் இயக்கத்தின் பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு வறுமையில் இருந்து மீள்வதற்கு பெரும் உதவியாக இருக்கும் நிலையில், இந்த வேலை திட்டம், குறித்த பிரதேச மக்களிடத்தில் ஏற்படுத்திய முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கை குறித்து இன்று இடம்பெறவுள்ள ஜனாதிபதி தலைமையிலான கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.

இவை தவிர மக்கள் முகம் கொடுத்துள்ள இடையூறுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com