Thursday, February 7, 2019

மாகந்துர மதுஸுடன் கைதான, பிரபல பாடகரின் வீடுகள், விசேட அதிரடி படையினரால் முற்றுகை!

டுபாயில் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த பிரபல பாடகரின் வீடுகளில், விசேட அதிரடி படையினர் இன்று சோதனை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 05 ஆம் திகதி, பாதாள உலகக் குழு மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் முக்கிய சந்தேக நபரான மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 25 பேர் கைதுசெய்யபட்டனர்.

அவர்களில் இலங்கையை சேர்ந்த பிரபல பாடகர் அமல் பெரேராவும் அவருடைய புதல்வரும் உள்ளடங்கியிருந்தனர். இந்த நிலையில் அவருக்கு சொந்தமான வீடுகளில், விசேட அதிரடி படையினர் சோதனை நடத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இதேவேளை கைது செய்யப்பட்ட பாதாள உலக குழுவினரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com