Monday, February 18, 2019

பிரதமர் மீது ஆவேசம் கொள்கிறார் எதிரிகட்சித் தலைவர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் முன்னணியின் 22 ஆவது பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த குற்றச்சட்டை முன்வைத்தார்.

அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்காக மன்னிப்புக் கோரும் வகையில் கிளிநொச்சியில் கருத்துக் வெளியிட்டு இருந்தார். பிரதமராது கருத்தானது இலங்கை அரசாங்கம் தனது போர்க்குற்றங்களை தானே ஒப்புக்கொள்ளும் செயற்பாடாகும். இதன்மூலம் பிரதமர் நாட்டிற்குத் துரோகம் இழைத்துள்ளார்.

பிரதமர் சர்வதேசத்திற்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் தனது கருத்துக்களால் போர்க்குற்றம் தொடர்பாக தெளிவாகக் கூறியுள்ளார். ஆகவேபிரதமரது கருத்தானது நாட்டினைக் காட்டிக்கொடுக்கும் செயலுக்கு ஒப்பானது என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com