Monday, February 18, 2019

நாடாளுமன்ற குழப்ப நிலை அறிக்கை 20 ல் சமர்ப்பிப்பு - பிரதி சபாநாயகர்

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பான அறிக்கையை எதிர்வரும் புதன் கிழமை சமர்ப்பிக்கவுள்ளதாக, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் 15, 16 ஆம் திகதிகளில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. இந்த குழுவின் அறிக்கையே எதிர்வ௫ம் 20 ம் திகதி நாடாளுமன்ற சபையில் சமர்ப்பிக்க உள்ளதாக பிரதி சபாநாயக்கர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் கருஜயசூரியவுடன் கலந்துரையாடியுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இதனிடையே நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பில குற்றப்புலனாய்வு திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com