Monday, February 18, 2019

கொழும்பின் போக்குவரத்தில் மாற்றம்

கொழும்பின் கிங்சி வீதி சுற்றுவட்டத்தில் இருந்து கேரி கல்லூரி சுற்றுவட்டம் வரையிலான வீதி போக்குவரத்து ஒருவழிப் போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் வாரநாட்களில் இந்த போக்குவரத்த்து நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டர்ன் பிரதேசம், கிங்சி வீதி சுற்றுவட்டத்தில் இருந்து கேரி கல்லூரி சுற்றுவட்டம் வரையிலான பகுதியில் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ஒருவழிப் போக்குவரத்து அமுலில் இருக்கும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. ஆயுர்வேத சுற்றுவட்டத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சிங்ஸி சுற்றுவட்டத்தில் இருந்து கேரி கல்லூரி சுற்றுவட்டம் வரை பயணிக்கும் வாகனங்கள் மருதானை, பொரளை வீதிகளின் இரு மருங்கிலும் அல்லது கிங்சி பகுதியினூடாக வோர்ட் பிளேஸின் இரு மருங்கிலும் பயணிக்க முடியும் என பொலிஸார் வாகன சாரதிகளை அறிவுறுத்தியுள்ளனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com