Tuesday, February 5, 2019

மாகாண சபை தேர்தல் தொடர்பான இறுதி முடிவு இன்று.

மாகாண சபை தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானம், இன்று நாடாளுமன்றத்தில்  வைத்து அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன்படி இன்று இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்தில், இந்த விடயம் தொடர்பாக இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த அமைச்சரவை கூட்டத்தின் போது, எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதிக்கு முதல், மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் யோசனை முன்வைக்கப்பட்டது.

இதுவரை மாகாண சபைக்கான தேர்தல் இடம்பெறும் தினம் குறித்து பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில், குறித்த யோசனையை இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்க, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாகாண சபை தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானம், இன்று அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com