Tuesday, February 5, 2019

நாடாளுமன்ற குழப்ப நிலை விசாரணைகளைத்துரிதப்படுத்துவீர். சீஐடி க்கு பிரதி சபாநாயகர்.

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி ஆலோசனை வழங்கியுள்ளார். குறித்த ஆலோசனை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14,15 மற்றும் 16ஆம் திகதிகளில் மோதல் நிலை ஏற்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில், தமது குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அறிக்கை தொடர்பில் சபாநாயகர் கருஜயசூரிய பரிசீலனை செய்வதாகவும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். பிரதி சபாநாயகர் ஆந்த குமாரசிறியின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு இணையாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் விசாரணைககளை முன்னெடுத்துள்ளது.

இந்த மோதல் தொடர்பில் 59 உறுப்பினர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இது தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு, சபாநாயகருக்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகமான BBC அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com