Sunday, February 17, 2019

சுமார் 900 KG போதைப்பொருள் கடந்த சில மாதங்களில் மாத்திரம் மீட்பு - பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஜீவ மெதவத்த

போதைப்பொருளை ஒழிப்பதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு, தொழில்நுட்ப வசதிகள் போதிய அளவு இல்லை என, பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஜீவ மெதவத்த ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்திருந்தபோது இதனைத் தெரிவித்துள்ளார்.

கொள்கலன்கள் ஊடாகவும் விமானங்கள் ஊடாகவும் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், சுமார் 900 கிலோகிராம் போதைப்பொருள் கடந்த சில மாதங்களில் மாத்திரம் கைப்பற்றப்பட்டதாக அவர் இதன்போது கூறினார். எனினும், அவற்றினை கண்டறிவதற்குத் தேவையான நவீன உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இலங்கை தபால் சேவை ஊடாக கடத்தல் காரர்கள் போதைப் பொருளை கடத்துவதாக அவர் கூறியுள்ளார்.

போதுமான தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட நவீன உபகரணங்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில், போதைப்பொருள் கடத்தலை சுற்றிவளைக்கும் நடவடிக்கை மேலும் வெற்றியளிக்கும் எனவும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஜீவ மெதவத்த குறிப்பிட்டுள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com