Sunday, February 17, 2019

இலவச அஞ்சல் கொடுப்பனவை அதிகரிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியாகியது

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரின் இலவச அஞ்சல் கொடுப்பனவை அதிகரிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமின் கையொப்பத்துடன் வௌியாகியுள்ளது.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒரு வருடத்துக்கு வழங்கப்பட்டகொடுப்பனவு 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயிலிருந்து, 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான இந்தக் கொடுப்பனவு 1,50,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, மாகாண சபை ஊழியர் ஒருவருக்கு வழங்கப்பட்டு வந்த 24 ஆயிரம் ரூபா கொடுப்பனவில்அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. புதிய வர்த்தமானி அறிவித்தலின்படி, மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கான இலவச தபால் கொடுப்பனவு 48,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com