Tuesday, February 5, 2019

யாழில் 72 கிலோ கேரளக் கஞ்சாவை கடத்திய 2 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் 72 கிலோ கேரளக் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு 8 மணி அளவில் குறித்த இருவரையும் பொலீசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இரண்டு போதை பொருள் கடத்தல்காரர்களையும் யாழ்ப்பாணத்தில் இருந்து பின்தொடர்ந்த விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர், தென்மராட்சி எல்லைப் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் கைதான இரண்டு சந்தேக நபர்களும் சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com