Tuesday, February 5, 2019

மாலைதீவின் ஜனாதிபதிக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று

மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் ஷோலிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது.

ஜனாதிபதியின் அழைப்பிற்கு அமைய மூன்று நாள் அரச விஜயம் மேற்கொண்டு மாலைத்தீவு ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடைந்தனர். இந்த நிலையில் நேற்று கொண்டாடப்பட்ட இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தில் விஷேட அதிதியாக மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் ஷோலி மற்றும் அவரின் பாரியார் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த விஜத்தின் அடுத்த கட்டமாக, இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com