Saturday, February 9, 2019

விசேட சுற்றி வளைப்புக்களில் 3876 பேர் பொலிஸாரினால் கைது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேகிக்கப்படும் 3876 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.


இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்றிரவு 11.00 மணிமுதல் இன்று அதிகாலை 3.00 மணி வரையில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 950 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் எனவும், 904 பேர் மது போதையுடன் வாகனம் செலுத்தியவர்கள் எனவும், அத்துடன் போதைப் பொருட்களை வைத்திருந்தவர்கள் 1033 பேர் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com