Thursday, February 28, 2019

புளூமென்டல் சன்கவின் உதவியாளர் ஹெரோயினுடன் கைது

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பேரை பொலீஸார் கைது செய்துள்ளனர்.

யாழ் - மடத்தடியில் வீடொன்றில் உரிமையாளர்கள் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மூன்று பவுண் தங்க நகை மற்றும் பணம் என்பவற்றை திருடியதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதற்கமைய குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி ஜெரோசன் தலமையிலான குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது அவர்களுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, நாவற்குழியைச் சேர்ந்த 22 மற்றும் 24 வயதுடைய இரண்டு இளைஞர்ககள் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளையும் பொலிசார் மீட்டுள்ளனர்.

இதனிடையே பிரபல பாதாள உலக குழு தலைவர்களில் ஒருவரான புளூமென்டல் சன்கவின் உதவியாளர் என அறியப்படும் சியாம் நசூல் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் இதனைத் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நேரத்தில் சந்தேக நபர் ஹெரோயின் வைத்திருந்தார் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com