Thursday, February 28, 2019

ஏப்ரல் மாதத்திலிருந்து புதிய விசா நடைமுறை

ஏப்ரல் மாதத்திலிருந்து புதிய விசா நடைமுறையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவரும்விதமாக இந்த விசா நடைமுறை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி வன ஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க முன்வைத்த பரிந்துரைக்கு அமைவாக அமைச்சரவை இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. நாட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை மூலம் பெருமளவிலான நிதி ஈட்டப் படுகின்ற நிலையில் அரசாங்ககம் இந்த புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தி அதிக வருவாயை பெற்றுக்கொள்ளும்ம் வேலை திட்டத்தை செய்யவுள்ளது.

இந்த புதிய நடைமுறையின்படி, ஏதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதியிலிருந்து ஆறு மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் இந்த சலுகையில் பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் நுழைவிசா இன்றி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள முடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. சில குறிப்பிட்ட காலப்பகுதியில் இலங்கைக்கான பயணங்களை மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் சுற்றுலா பயணிகளை பெருமளவில் நாட்டுக்கு அழைக்கும் வகையில் இந்த விசா நடைமுறையை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வருடத்தின் ஏனைய நிகழ்ச்சி நிரலிற்கு அமைவாக ஏப்ரல் மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்த வீதத்தை கொண்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. .

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com