Thursday, February 28, 2019

நாட்டில் இன பேதங்கள் இல்லை- விமலதம்ம தேரர்

நாட்டிலுள்ள அனைவரும் தோழமையுடன் எவ்வித பிரச்சினையுமின்றி இருப்பதாக, மல்வத்து மகா விகாரை பிரவின் அநுநாயக்கர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் தெரிவித்துள்ளார். நட்புறவை வளர்த்துக் கொள்ளும் நோக்குடன் இலங்கைக்கு விஜயம் செய்த மியன்மார் ஊடகவியலாளர்கள் குழாம் நேற்று மல்வத்து மகா விகாரை பிரவின் அநுநாயக்கரை சந்தித்து கலந்துரையாடலொன்றை மேற்கொண்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த கால யுத்தத்தின்போது இராணுவம், பொதுமக்கள் என இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

ஆனால், சிலர் கூறுவது போன்று நாட்டிலுள்ள பல்வேறு சமூகங்களுக்கு இடையே எவ்வித பிரச்சினையும் இல்லை. மூவினத்தவர்களும்
இங்கு ஒத்துழைப்புடன் வாழ்ந்து வருகின்றனர். மாறாக சில இடங்களில் இடம்பெறும் சிறு சிறு இனவாத செயல்கள் காரணாமாக முழு நாட்டிற்கும் அவப்பெயர் ஏற்படுகின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com