கைவினைஞர்களுக்கான காப்புறுதித் திட்டம் மார்ச்சில் அறிமுகம் - அமைச்சர் ரிசாட்,
கைவினைஞர்களுக்கு நன்மை பயக்கும் வகையில், புதிய காப்புறுதி திட்டம் ஒன்று இந்த வருடத்தின் மார்ச் மாதமளவில் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைவினைத்துறையில் ஈடுபடும் கைவினைஞர்களை ஊக்கப்படும் நோக்கிலேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.
அந்த வகையில், தேசிய அருங்கலைகள் பேரவையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் 28000 பேர், இத்திட்டத்தின் மூலம் நன்மையடைவர் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியுள்ளார்.
சுதேச கைவினைத் துறையினை இந்த திட்டத்தின் மூலம் பாதுகாக்கலாம் என அவர் கூறியுள்ளார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய அருங்கலைகள் பேரவை ஏற்பாடு செய்த ”சில்ப அபிமானி – 2018” கைவினைத் தொழிற்துறை ஜனாதிபதி விருது விழாவில் கலந்து கொண்ட ரிசாட் பதியுதீன் இதனை கூறினார்.
கைவினைத்தொழில் இந்நாட்டிலே சுயதொழில் வாய்ப்புக்கான பாரிய துறையாக காணப்படுகின்றது. சுமார் ஒரு இலட்சம் பேர் இத்துறையில் ஈடுபடுகின்றர். மார்ச் மாதத்தில் கொண்டு வரப்படவுள்ள இந்த காப்புறுதித் திட்டத்தில் சுமார் 5000 கைவினைஞர்கள் முதற்கட்டமாக நன்மையடைவர். இது விஸ்தரிக்கப்பட்டு 2023 ஆம் ஆண்டளவில் பதிவு செய்யப்பட்ட அனைவரும் இத்திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ளனர்.
தேசிய அருங்கலைகள் பேரவையின் செயற்பாடுகளை மேலும் விரிவுப்படுத்தி இத்துறையை முன்னேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் நாம் கைவினைஞர்களுக்கான பயிற்சிகளை சிறப்பாக விரிவுபடுத்தியுள்ளோம்.
அருங்கலைகள் பேரவையானது கைவினைப்பயிற்சி நிலையங்களை நாடளாவிய ரீதியில் அமைத்து பல்வேறுப்பட்ட பயிற்சி நெறிகளை ஆரம்பித்துள்ளது.
அத்துடன் ஜப்பானைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளின் மகத்தான கலாசார மரபுரிமைகளைப் பாதுகாக்கும் சர்வதேச ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து, புதிய திட்டங்களை ஆரம்பித்துள்ளோம் என்று அமைச்சர் ரிசாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment