Saturday, January 5, 2019

நீர்கொழும்பில் கூண்டுடன் நாய் ஒன்று, எரியூட்டி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது.

நீர்கொழும்பு – கொப்பர சந்தியிலுள்ள வீடொன்றில் இருந்த நாய், கூண்டுடன் எரித்துக் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள், தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

இந்த கொலை சம்பவம் தொடர்பில் நேற்று மாலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவர் ஒரு கூலித் தொழிலாளி என்றும் குறிப்பிட்டனர்.

கடந்த 31 ஆம் திகதி லெப்ரடோ என்ற இனத்தைச் சேர்ந்த நாய், மண்ணெண்ணெய் ஊற்றி கூண்டுடன் எரியூட்டப்பட்டுள்ளது. இதனை அடுத்து எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட நாய், மறுநாள் இரவு பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில், நீர்கொழும்பு பொலிஸ் குழுவொன்றும் குற்றத்தடுப்புப் பிரிவின் குழுவொன்றும், விசாரணைகளை மேற்கொண்டுள்ளன.

இதேநேரம் மேற்படி சம்பவம் குறித்து ஏதேனும் தகவல்கள் கிடைத்தால், உடன் விரைந்து தமக்கு அறிவிக்குமாறு நீர்கொழும்பு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இந்த கொலைச் சம்பவம் குறித்த தகவல்களை, 071 859 16 30 அல்லது 071 859 16 26 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தகவல்களை வழங்க முடியும் என, நீர்கொழும்பு காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com