Saturday, January 5, 2019

எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகம் குடும்ப சொத்தல்ல- கூட்டமைப்பை வறுத்தெடுக்கும் செஹான் சேமசிங்க.

எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தை பலவந்தமாக வைத்துக்கொள்ள, அது ஒன்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் குடும்ப சொத்தல்ல என்று, நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் செமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் பிடித்த தலைவர் மஹிந்த ராஜபக்சவே என்று கூறிய செஹான் சேமசிங்க, அவருக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அத்துடன் நீண்ட காலமாக அரசியலில் இருந்த இரா.சம்மந்தன் முறையாக எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் எனவும் கோரினார்.

பாராளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய, எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்சவே செயல்படுவார் என்று அறிவித்த பின்னரும், தமிழ் தேசிய கூட்டமைப்பு முரணான செயல்பாடுகளை முன்னெடுத்து வருவதாக கூறிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அத்துடன் எதிர்வரும் தேர்தலில் தமது தரப்புக்கே பலத்த வெற்றி கிடைக்குமென, நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com