Saturday, January 5, 2019

நாலக்கவின் கைது உறுதியான சாட்சியங்களின் பின்னரே இடம்பெற்றது - குற்றப்புலனாய்வு பிரிவு.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பான உறுதியான சாட்சியங்கள் கிடைத்த பின்னரே அவர் கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வு பிரிவினர், நீதிமன்றத்தில் வைத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்த வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் இடம்பெற்ற போதே, குற்றப்புலனாய் பிரிவினர் இவ்வாறு குறிப்பிட்டனர். கொலை சதித்திட்டம் தொடர்பான ஆவணங்கள், சீல் வைக்கப்பட்ட உரையொன்றுக்குள் வைக்கப்பட்டு, நாமல் குமாரவிற்கு வழங்கப்பட்டதாக, நாலக டி சில்வாவினால் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படும் தொலைபேசி உரையாடலின் குரல் மாதிரி வெளியானதை அடுத்தே, நாலக்க சில்வாவை தாம் கைது செய்தததாக, உதவி பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க லொக்கு ஹெட்டிகே நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த குரல் மாத்திரைகளின் மூலம் 427 உரையாடல்கள், 26 காணொளிகள்,4321 புகைப்படங்கள் என்பன மீள பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தொலைபேசியில் உள்ள குரல் மாதிரிகளை பற்றிய மேலதிக ஆய்வுகளை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக குற்ற புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com