Saturday, January 5, 2019

சம்மந்தன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் - வாசுதேவ நாணயக்கார கூறுகிறார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது. இந்த அமர்வில் சபாநாயகர் கரு ஜெயசூரிய எதிர்க்கட்சி தலைவர் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கருத்து வெளியிடும் போதே, மேற்கண்டவாறு கூறினார். மஹிந்த ராஜபக்சவே எதிர்க்கட்சி தலைவர் என்று சபாநாயகர் அறிவித்த போதிலும், இரா.சம்மந்தன் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பது குறித்து, சபாநாயகர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.

சபாநாயகர் கடந்த ஆண்டு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே நடந்து கொண்டமை அதிர்ப்தியளித்ததாக தெரிவித்த வாசுதேவ நாணயக்கார, தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களை ஆராய்ந்து சபாநாயகர் சரியான முடிவை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com