Saturday, January 5, 2019

அரசியலமைப்பு வரைவை இனவாதத்திற்கே மஹிந்த ராஜபக்ச பயன்படுத்துகிறார்- அஜித் பி. பெரேரா

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச, அரசியலமைப்பு வரைவை இனவாதத்திற்கே பயன்படுத்தி வருவதாக, ராஜாங்க அமைச்சர் அஜித் பீ. பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.

மக்கள் மத்தியில் இனவாதத்தை பரப்பி, அதன் மூலம் அரசியை தொடர பல அரசியல் வாதிகள் முயற்சி எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான அரசியல்வாதிகள், மக்கள் மத்தியில் பிழையான எண்ணக்கருக்களை உருவாக்குவதாகவும், ராஜாங்க அமைச்சர் அஜித். பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்கள் அனைவருடனும் ஒன்றிணைந்து பயணிப்பதற்காகவே, அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்க எத்தனிக்கிறது. எனினும் இந்த அரசியலமைப்பை கொண்டு இனவாதத்தை தூண்டி, அதன் மூலம் அரசியலை கொண்டு செல்ல மஹிந்த ராஜபக்ச மும்முரமாக செயல்பட்டு வருவதாக அஜித் பி. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com